Showing posts with label பார்ப்பனீயம். Show all posts
Showing posts with label பார்ப்பனீயம். Show all posts

Tuesday, March 12, 2013

தஞ்சைக்குள் நஞ்சா ?

ஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.

 

வானமோ பொய்த்தது; கர்நாடகமோ கடைக்கண் மூடியது; வந்ததோ வறட்சி. தொடர்வதோ தற்கொலைகள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் தற்கொலைகளின் ஆரம்பக்கட்ட அறிகுறி காவிரிப் படுகையில் தென்படுகிறது. இதில், பொன்னியின் செல்விக்கு (!) ( செல்வி.ஜெயலலிதா-வாம் ) மட்டும் குறைச்சல் இல்லை. ஏற்கனவே ஈழத்தை வீட்டு பீரோவில் வெச்சு இருக்காங்க. இன்னிக்கோ நாளைக்கோ பீரோவை திறந்து, எடுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.


இப்படி ஏற்கனவே தொல்லையில் துவளும் தஞ்சையில் மற்றொரு பாதகமாக பேரிடியொன்று வந்து இறங்குகிறது.

ஆம் ! அக்டோபஸ் வருகிறது ... ஜாதீ என்னும் ஆக்டோபஸ் வருகிறது.

தோ ஜாதீ புதிதாக தஞ்சைக்குள் நுழைய வரவில்லை. ஏற்கனவே இருக்கிற ஜாதீகளை ஒன்றிணைக்க வருகிறது. தஞ்சைக்குள் பெருவாரியாக இருக்கும் ஜாதீ கட்சிகள் முக்குலத்தோர் கட்சிகளே. அதாவது, கள்ளர், தேவர், மறவர் போன்றவை. இவர்கள் தஞ்சை கிராமங்களில் செய்த அட்டுழியங்கள் எண்ணிலடங்கா. 

தெருவுக்குள் ஆதி திராவிடர்கள் செருப்பு போடக் கூடாது என்றவர்கள். தோளில் துண்டுப் போடக் கூடாது என்றவர்கள். சைக்கிளை தெருவில் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியவர்கள்; ஆதி திராவிடர் தெரு வழியாக வரும் குழாயில், தண்ணீர் பிடிப்பது இழுக்கு என்று கருதுபவர்கள். ஆதி திராவிடர்களை கொச்சைப் படுத்திப் இழிவாய் பேசுவது; கட்டி வைத்து அடிப்பது போன்றவற்றை செய்த யோக்கியவான்கள் தான் இந்த முக்குலத்தோர். மறுக்க முடியுமா ?


இப்படி ஆதிக்கம் செய்தவர்கள் இன்றைய தேதியில், ராஜ ராஜ சோழனை தங்கள் முன்னோர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் 'மனு சாஸ்திர' அடிப்படையில் நீதி பரி பாலனம் செய்யப்பட்டது. அந்த மனு சாஸ்திர அடிப்படையில் ஆதி திராவிடர்கள் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரி என்று ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். இன்றைக்கும் இந்த பிரிவினையை அனைத்து கிராமங்களிலும் காணலாம்.

மிழ்நாட்டில் ஆதி திராவிடர் நிலை இவ்வாறாகத்தான் இருக்கிறது :

Percentage to Total Workers ( தமிழகம் முழுதும் )   
 i. Cultivators (  விவசாயிகள் ) - 10.2 %
 ii. Agricultural Labourers ( விவசாயத் தொழிலாளர்கள் ) - 58.5 %
 iii. Household Industry Workers ( வீட்டு வேலைத் தொழிலாளர்கள் ) 2.3 %
 iv. Other Workers ( இதர வேலையாட்கள் ) - 29.0%

தஞ்சை மாவட்டத்தில் புள்ளி விவரம் இவ்வாறாகக் கூறுகிறது.
தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஆதி திராவிடர் - 18%
தஞ்சையில் மொத்தமாக கல்வி பெற்றோர் - 75.5% 
கல்வி அறிவு பெற்ற  ஆதி திராவிடர்கள் - 64.1%

ஆதாரம் : http://www.tn.gov.in/deptst/ADIDRAVIDARANDTRIALWELFARE.pdf

இந்த புள்ளி விவரம் என்ன புரிய வைக்கிறது என்றால்; இன்னும் கல்விக் கண் தஞ்சையில் முழுமையாக இல்லை.

பாதிக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் விவசாயத் தொழிலாளர்கள். 29 விழுக்காட்டினர் இதர வேலையாட்களாக இருக்கிறார்கள். அது என்ன இதர  வேலையாட்கள்? தெருக் கூட்டுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், மலம் அள்ளுபவர்கள். அவர்கள் என்ன விரும்பியா செய்கிறார்கள்? இல்லை. இந்த பாழாய்ப்போன பார்ப்பனீய இந்து சமூகம் திணித்தது. ஏன் என்று கேட்டால்? 'முற்பிறவி வினை' என்று காதில் பூ சுத்துகிறார்கள் . 'தலை விதி' என்று வாய் கிழியப் பேசுகிறார்கள்.

நம் கேள்வி இதுதான்:
இந்த 'முற்பிறவி வினை', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விழ மாட்டேங்கிறது? இந்த 'தலை விதி', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விடிய மாட்டேன்கிறது ?


இன்றைக்கு இதே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த படித்த இளைஞர்கள் என்னதான் வெளி நாடுகளில் வசித்தாலும்,  தாங்கள் ஏதோ உயர்ந்த ஜாதி எனும் எண்ணம் கொண்டவராகவோ; தங்கள் ஜாதி, பெருமை வாய்ந்தது எனும் என்ணம் கொண்டவராகவோ; தங்கள் சுய ஜாதி அபிமானம் கொண்டவராகவோ எண்ணிக் கொண்டோ - தங்களின் பெயரின் பின்னால் 
சோழகர் என்றோ , மண்கொண்டார்  என்றோ, தஞ்ச்சிராயர் என்றோ, சேனை நாட்டார் என்றோ இன்னும் இத்யாதி இத்யாதி ஜாதி வாலைப் போட்டுக் கொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள். 

தெரியாமல் போடுகிறவர்கள் திருந்திக் கொள்வார்கள். தெரிந்தே போடுவோர், 'அடடா! மனித குல சமத்துவத்திற்கு எதிராக இப்படி தவறாக  நடந்து கொண்டோமே' என்று வருந்திக் கொள்வார்கள்.

படித்துப் பட்டம் பெற்று வேலையில் அமர்ந்து  சாதிப்பார்கள்  என்றுப் பார்த்தால், ஜாதீ அல்லவா பார்த்துக் கொண்டு  இருக்கிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த ஜாதீக்களை ஒருங்கிணைக்க தஞ்சைக்குள் ஓர் ஆக்டோபஸ் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆக்டோபசின் பெயர் "ராம தாஸ்". எப்படி, கதைப்படி ராமன் நம்மை எல்லாம் "சூத்திரன்" என்றும் "பஞ்சமன்" என்றும் நிலை நிறுத்த எண்ணினானோ அதே போல இந்த ராம தாஸ் செய்ய முனைகிறார்.ராமனின் தாசன் அல்லவா ?

முக்குலத்தோர்(கள்ளர் , தேவர், மறவர் ) யோக்கியமானவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருப்பதாகத் தாங்களே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இவர்கள் வாங்கும் நிலத்துக்கு பூமி பூஜை செய்ய பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்; இவர்கள் கிரஹப் பிரவேசம் எனும் பெயரில் பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்;இவர்கள் வீட்டுத் திருமணத்தை பார்ப்பன புரோகிதர் நடத்தி வைப்பதும்; பெற்றோருக்கு திதி   கொடுக்கும் போது பார்ப்பன புரோகிதனை அழைத்து தங்கள் சுயமரியாதையை இழப்பதும் இதே முக்குலத்தோர்தான்.இந்தச் சுயமரியாதை சிங்கங்கள் கோவிலில் இன்றளவும் கருவறைக்குள் நுழைய முடியாது. அவர்களின் பிரத்யேக  ஜாதீ கோவிலில் வேண்டுமானால் போகலாம். மறுக்க முடியுமா?

 
"னைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆக முடியாதுடா அம்பி. அது பிரம்மாவின் முகத்தில் பிறந்தவாள் மட்டும்தான் செய்யணும். புரியுதோ இல்லியோ நோக்கு. அபிஷ்டு அபிஷ்டு !! பிராமனாள் எல்லாம் கடவுளுக்கும் மேலானவாடா. வேதத்தை படிக்கலியோ என்னோ ?! ஓ ! வேதத்தை நீர் படித்தா காதில ஈயத்த ஊத்த சொல்லின்னா எழுதி வெச்சிருக்கோம். சித்தே மறந்துட்டேண்டா அம்பி !! 

நன்னா ஞாபகம் வெச்சுக்கோ - எங்க்களவாவ வெச்சுதான் நீங்கோ பூமி பூஜை பண்ணனும், வீடு குடி போகனும், திருமணம் செய்யணும், சாந்தி முஹுர்த்தம் செய்யணும், திதி செய்யணும்; ஆனா, நன்னா ஞாபகம் வெச்சுக்கோ இந்த கருவறைகுள்ள மட்டும் வரப்டாது. ஏன்  ப்டாது எதுக்கு ப்டாதுன்னு கேக்கப் புடாது!

கலைஞர், உங்களவா சுயமரியாதை அடையனும்ன்னு,  'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்' ரெண்டு தடவ சட்டமா கொண்டு வந்தார். விட்டுவோமா ? இல்ல அவ்வளவு சீக்கிரத்தில் அத விட்டுடுவோமான்னுதான் கேட்கிறேன். 

உங்களவா முதுகில பாரு. எங்களவா முதுகில பாரு. வித்தியாசம் தெரியுதா ? ம்ம்ம்.. ஆமாம்! நாங்கள் பூனூல் போட்டிண்டு இருக்கோம். ஏன் தெரியுமா? நாங்கள் துவிஜாதிகள் ( இரு பிறப்பாளர்கள்  ). சுத்திராளுக்கு  பூணூல் போட உரிமை இல்லைடா அம்பி! மனு சாஸ்திரம் சொல்லுது.

ஆனாலும் நீங்களும் நாங்களும் இந்து. மறந்து விடாதீர்கள்; மறந்தும் இருந்து விடாதீர்கள்; நாமெல்லாம் இந்து; எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

லோகத்தில் பொறாமை அதிகரிச்சுட்டே இருக்கு. வேனும்னா பாரு, இப்படி சுயமரியாதை-கியமரியாதை உரிமை-கிரிமை ஏதானும் கேட்டா,  எங்கள் காலில் விழுகிற உங்களவாவே உங்கள எதிர்க்கிறாளா இல்லையா பாரு. பத்திரிகை ( தினமலர், தினமணி, துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி ) எல்லாம் எங்களவா கைய்லன்னா இருக்கு.

இவாளுக்கு வியாக்யானம் சொல்லியே பிராணனை போகுதே !!"

நி
ற்
ப்படி இந்த முக்குலத்தோர் தங்கள் சுயமரியாதையை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அவர்களும் ஆதி திராவிடர்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைக்கக் கூடாது.

தந்தை பெரியார் ஒழுக்கம் என்பதாகக் கூறியது எவ்வளவு ஆழமானது:

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

இந்து மதத்தின் படியே இந்த முக்குலத்தோர் என்போர் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? சூத்திரன் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இந்து மதத்தின் படியே ஆதி திராவிடர்கள் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? பஞ்சமர் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இருவர் மேலும் இந்து மதத்தின் வர்னாஸ்ரம இழிவுதானே தொக்கி நிற்கிறது ?

சூத்திரன், பஞ்சமர் என்ற சொல் வெருக்கத்தக்கதாக இருந்தாலும், 
பஞ்சமர் என்ற சொல்லைக் காட்டிலும் சூத்திரன் என்ற சொல் அல்லவா மகா மட்டமான கேவலமான இழிவான சொல். மறுக்க முடியுமா?

பார்ப்பனர் அல்லாத அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறது. திராவிடர், ஆதி திராவிடர் இருவருக்குமே இட ஒதுக்கீடு இருக்கிறது. இருவருமே பார்பனீயத்தால் பாதிக்கப்பட்ட சமுகம். இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி திராவிடருக்கும் இருக்கிறது, ஆதி திராவிடருக்கும் இருக்கிறது. 

ஆனாலும் , வழக்கம் போலவே ஆதி திராவிடர் கல்விப் பெற்றாலும், பொருளாதார மேம்பாடு அடைந்தாலும் பிற்படுத்தப் பட்டோர்க்கு பொறாமைத் தீ பொங்கி வழிகிறது. எப்படி என்றால்? பார்ப்பனர்களுக்குப் பொத்துக் கொண்டு வருமே அதைவிட கொஞ்சம் குறைவாக பொத்துக் கொண்டு வருகிறது.

ஏற்கனவே இருக்கிற இழிவு பத்தாது என்று, இழிவு++ ஆக  ராமதாஸ் அக்டோபசை விட்டால் என்ன ஆகும்?

வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்பானேன்?


முறையாக காவிரியில் தண்ணீர் கிடைத்து நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய தஞ்சையில் ஜாதீ எனும் நஞ்சையா விதைப்பது?

உண்மையுடன் 
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Friday, March 1, 2013

அன்னை-யார்?

காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம்.

 

க்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும்  அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் 'அம்மா'வாக இருக்கலாம்.


  

ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம்.


ண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்?

சில காலங்களுக்கு முன்னர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றி கூறிய ஒரு செய்தி மிக சுவாரசியமாகவும் - ஆகா ! இவ்வளவு சுய மறுப்பாளரா தந்தை பெரியார் எனும் பிரமிப்பே மேலோங்கச் செய்தது.  

தந்தை பெரியார் அவர்கள், இந்து மதத்தில் உயர் ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தார்; ஆனாலும், காலம் முழுதும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியின் முன்னேற்றதுக்கு உழைத்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், செல்வமும் சொத்தும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார்.  ஆனாலும், காலம் முழுதும் ஏழைகளுக்காகவே பாடுபட்டார். தன்  சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கே செலவு செய்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களை, கன்னடர் என்றும் தெலுங்கர் என்றும் கொச்சைப் படுத்தினார்கள். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அந்தக் கொச்சைப்  படுத்தலைப் புறந்தள்ளி, தமிழர்-தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.

என்ன! தந்தை பெரியார் அழகு தமிழில் அடுக்கு மொழியில் பேசத் தெரியாதவர்; கொச்சைத் தமிழில் நடைமுறையில் நடப்பவற்றை உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கூறுவார்கள். ஆனாலும், அந்த கொச்சைத் தமிழ்தான் தமிழரைத் தன்மானம் பெற வைத்தது.

தந்தை பெரியார் ஆணாகப் பிறந்தார்; ஆனாலும் காலம் முழுதும் பெண்ணின் உரிமைக்காக ஓடி ஓடி உழைத்து கொட்டித் தீர்த்தார்கள்.

பாரதியார் கூட பெண் உரிமைக்காக வெறுமே பாடினார். தந்தை பெரியார் அவர்களோ பெண் விடுதலைக்காக, பெண் உரிமைக்காக கிராமம் கிராமமாக காலில்  சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருந்து ஈ.வெ.ராமசாமி ஆன நம் தலைவருக்குத்தான், பெண்கள் மாநாடு  கூட்டி  "பெரியார்" என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள், உயர் ஜாதி என்று சொல்லப் படுவதான, பணக்காரன் என்கிற, பிற மொழிக்காரர் என்கிற, ஆண் என்கிற அனைத்து தளத்திலுமே ஒரு சுய மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் !


ன்னே ஓர் ஆச்சரியம் ! இப்படிப் பட்ட ஒரு சுய மறுப்பளரை இந்த உலகம் கண்டதுண்டா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இன்னும் கூற வேண்டுமானால், காங்கிரசில் சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று தான் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும்  தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்கள். அடடா! இதுவன்றோ பதவி மறுப்பு ! இன்றைக்கோ, பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் என்றாலும், பல்லிளித்துக் கொண்டு தாஜா செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் ! 

மதராஸ் ராஜதானியை ஆட்சி செய்யும் பெரும் பதவி இரண்டு முறை பெரியாரை நோக்கி வந்தது. வந்த பதவி பூமராங் போல திரும்பிச் சென்றது. இரண்டு முறையும் அந்தப் பதவியை துச்சமென மதித்து ஏற்க மறுத்தார்கள். 

சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இவற்றையெல்லாம் கேட்டு மலைப்பாய் இருக்கிறதா ?!

பொறுங்கள் ! இன்னும் இருக்கிறது !

இவ்வளவு சுய மறுப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் ஒரு சுய மறுப்பு இருக்கிறது ! அந்த சுய மறுப்புதான் உலக இயற்கையின் கடும் சவால். அந்த சுயமறுப்பை வாழ்ந்த தியாகச்  செம்மல்கள் யார் தெரியுமா ?!

இது ஏதடா, இதுவரையில் தந்தை பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இப்போது "செம்மல்கள்" என்று பன்மையில் கூறுகிறானே என்று எண்ணுகிறீர்களா ?!

அந்த தியாகச் செம்மல்கள் யாவர் தெரியுமா? அவர்கள்தான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் !

நம்மவர்களில் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை; வழக்கம் போல பார்ப்பனப் பத்திரிகைகள் வரலாற்றை மறைக்கக் கூடும்; திரித்திருகக் கூடும்.1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம்தான் நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை பெறச் செய்தது. இன்றைய நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. இதுவே 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சட்டப்படி உரிமை இல்லை! இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப்பட்ட நிலை என்றால், பெரியார் காலத்தில் கேட்கவா வேண்டும் ?

ன்றைக்கும் எண்ணிப் பார்த்தால், நம் பாட்டிகளுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் சொத்து இருக்குமோ என்னவோ தெரியாது; ஆனாலும், வசதி வாய்ப்புக்கு ஏற்ப நம் பாட்டிகளின் புகுந்த ஊரில், தாத்தா வழி வந்த சொத்துக்கள் இருகக்கூடும்.

இப்படி இருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிடர் கழகத்தின் சொத்தையும், தந்தை பெரியாரின் கொள்கையையும் பாதுகாக்க  தந்தை பெரியார் எடுத்த சட்டப்படியான நடைமுறை நடவடிக்கையே 'அன்னை மணியம்மையார்'


இன்றும் கூட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் விசா காரணங்களுக்காக சட்டப்படியான திருமணப் பதிவை முன் கூட்டியே ரிஜிஸ்டர் செய்வது வழக்கம். பின்னொரு நாளில் சமுதாயத்துக்கு அறிவிக்கும் திருமண நாள் என்பது நடைமுறை வாடிக்கை !

"ஏனப்பா? இப்படி செய்கிறீர்களே ?! இப்படி செய்யலாமா ?! இது வைதிகத்திற்கும் வேதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எதிரானது என்று யாராவது எள்ளலுடன் துள்ளலுடன் கேள்வி கேட்ககே கூடாது ! மூச் !"

"அது வசதிக்காக செய்து கொள்வது. இப்பல்லாம் யார் சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கிறார்" என்று கூறுவார்கள்.

அப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் ? நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு  தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.

நல்லது ! எப்படியோ முற்போக்கடைந்தால் நல்லதுதான் !


ந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரை சட்ட வசதிக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். 
தன் அசதிக்காகவோ தன் வசதிக்காகவோ அல்ல;
தமிழ் இனம் தன்மானம் அடைய வேண்டும் எனும் சமுதாய வசதிக்காக !

 

இப்போது புரிகிறதா? தந்தை பெரியாரின் சுய மறுப்பின் மகுடம் எது என்று?

இல்லறத்தில் இருந்து துறவியாய் வாழ்ந்த இந்த இரு தியாக செம்மல்களைத்தான் பார்ப்பன ஏடு ( குமுதம் ரிப்போர்ட்டர்) பாம்பெடுத்து படம் ஆடி இருக்கிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்தவுடன், ஏசினோர் ஏராளம்; பேசினோர் பற்பலர் !

கால ஓட்டத்தில் தந்தை பெரியாரின் கணிப்பே மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

அன்று ஏசினோர், பின்னர் அன்னையை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்று புறம் பேசினோர், பின்னர் அன்னையை போற்றச் செய்தார்கள்.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

அவற்றையெல்லாம் அடுக்கினால் இந்தக் கடுரையின் நீளம் இன்னும் நீளும்!

முத்தாய்ப்பாக ஒன்றை சொன்னால்
ஆரியக் கூட்டம் நடு நடுங்கும்!
பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கும்!
சூழ்ச்சி நரிகள் சற்றே நெளியும்!
அதுதான் இராவண லீலா !
இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்பது.




கதையின் படியே, கோழையான, மறைந்திருந்து தாக்கும், பெண்களைக் கொன்ற ( தடாகை, சூர்ப்பனகை ), தேவர்கள் செய்யும் அராஜக உயிர்க் கொலை யாகங்களைப் பாதுகாத்த, பூதேவர்கள் எனும் பார்ப்பனர்களைத்  தவிர சூத்திரன் அறிவுப் பெறக் கூடாது என்று சம்பூகனைக் கொன்ற இராமனுக்கு இராம லீலா இருக்கும் போது,

வீரனான, தேவர்கள் செய்யும் உயிர்க் கொலைகளைக் கண்டித்து அது தவறு நடக்கக் கூடாது என்று தடுத்த 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய  உயிர் நேயம் மிக்க; அறிவில் ஆற்றலில் சிறந்த,  தன் குடும்பப் பெண்களைக்  ( தடாகை, சூர்ப்பனகை ) கொன்ற  இராமனை பழி வாங்க, இராமனின் மனைவியை கொணர்ந்தும் கடைசி வரை சீதையைப் பாதுகாத்த இராவணனுக்கு   இராவண லீலா இருக்கக் கூடாதா ?


இப்படி, இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றததிலும் உத்தரவு வாங்கியவர்கள் யார் தெரியுமா ?

அவர்கள் தான், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் !




இப்போது பெருகிறதா அன்னை யார் என்று ?

ஆம்! அன்னை மணியம்மையார் அவர்கள்தான் !


உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Monday, September 3, 2012

மூன்றின் முனகல் சத்தம் !

ட ஒதுக்கீட்டை சிலர் மேம்போக்காக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு சில கேள்விகள். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தயவு செய்து கீழ் கண்ட கேள்விகளுக்கு எப்பாடு பட்டாவது விடை தேடித் தருவார்களேயானால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.


கல்வி :
தமிழகத்தில் கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எத்தனை விழுக்காடு ?
அவர்களின் ஜாதி என்ன? அதாவது கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கும், பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். கல்வி பெற முடியாத சூழலில் உள்ளோரின் பெற்றோர் கல்வி நிலை என்ன? பெற்றோரின் ஜாதியை தனியாகக் கேட்கத் தேவை இல்லை. ஏன் என்றால் ? பெற்றோரின் ஜாதிதானே பிள்ளைக்கும் ! ஜாதிதான் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறதே இந்தப் பாழாய் போன சமுதாயத்தில்.

பொருளாதாரம் : 
தமிழகத்தில் ஏழை எளியோர் எத்தனை பேர் ? அவர்கள் எத்தனை விழுக்காடு ? அவர்கள் ஜாதி என்ன?அதாவது ஏழை எளியோர்ஆக விளிம்பு நிலையில் இருக்கும் பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். ஏழை எளியோராக இருக்கும் அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலை என்ன ?


இந்தப் புள்ளி விவரங்களை, விவரம் அறிந்த மக்கள் தேடிக் கண்டு பிடித்துக் கூறுவார்களேயானால் நம் திராவிட சமுதாயம் மேன்மையுற பாக்கியம் செய்தவர்களாவர்கள். எப்படி என்றால்? இந்தப் புள்ளி விவரத்தின் படி,  பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) ஆகியோரில் கல்வி பெற வழி இல்லாதவர்கள் மற்றும் அவர்களில் ஏழை எளியோருக்கு கல்வியும், அந்த கல்வியின் மூலம் வறுமையை போக்கவும் இட ஒதுக்கீடு அத்தியாவசியம்.


இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றவர்களே திரும்ப திரும்ப பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது நியாயமற்ற குற்றச்சாட்டு. எப்படி என்றால், இட ஒதுக்கீட்டின் பலனை திரும்ப திரும்ப  பெறக் கூடாது என்று கூறுவதற்கு முன்னால், இந்து மதத்தை யாராவது சீர்திருத்தி ஜாதி இல்லாமல் செய்து விட்டாலும்; By constitution, by law and by practice  ஜாதி ஒழிக்கப் பட்டுவிட்டாலும், தாராளமாக இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிடலாம்.

By constitution-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By Law-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By practice-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
இந்து மதத்திலும் சீர் திருத்தம் செய்யாமல் ஜாதி ஒழிக்கப்படாமல் இருக்குமேயானால், 
இட ஒதுக்கீடு வேண்டுமா கூடாதா ?

ஜாதி எந்த காலம் வரை பாதுகாக்கப் படுகிறதோ, அந்தக் காலம் வரை ஜாதிவாரி இட ஒதுக்கீடு இருந்துத்தானே ஆக வேண்டும் ?

ஜாதி படி நிலை இவ்வாறாக இருக்கிறது : 


நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீட்டையா ? ஜாதியையா ?

நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீடு என்றால், ஜாதியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்? என்று முதலில் கூறுங்கள். அதாவது, மக்களின் சிந்தனையில், மக்கள் சொல்லும் சொல்லில், மக்களின் செயலில், மக்களுக்கான சட்டத்தில், சட்டத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனத்தில், இந்து மதத்தில் என அனைத்திலும் எப்படி ஜாதியை ஒழிக்கப் போகிறீர்கள் ? இவற்றிற்கு விடை சொல்லாமல் இட ஒதுக்கீட்டை மட்டும் குருட்டுத்தனமாக எதிர்ப்பது நியாயமற்றதா இல்லையா ?

மாறாக, இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டே, ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, மதம் குறிப்பிடுவது போன்றவை சொல்லொன்று செயல் ஒன்றாகும்.

நீங்கள் எதிர்ப்பது ஜாதியை மட்டும்தான் என்றால், ஜாதியை பாதுகாக்கும் இந்து மதத்தை எப்படி சீர்திருத்தப் போகிறீர்கள்? இந்து மதத்து வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களை எப்படி மாற்றி எழுதப் போகிறீர்கள்? உருப்படியாக செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், ஜாதிச் சான்றிதழ் வாங்கக்கூடாது. பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில், ஜாதி விவரம் கூறக்கூடாது; இந்து என்று எங்கேயும் பதிவு செய்யக் கூடாது.

மாறாக, ஜாதியை எதிர்த்துக் கொண்டே, இந்து மதத்தை ஏற்றுக் கொள்வது என்பது, மேலே ஏறும் escalator-ல் பின் பக்கமாக நடப்பதற்கு சமானம். Escalator மேலே ஏறுவது போல தோற்றம் அளித்தாலும். பின்னால் நடப்பதால் ஒரு ஏற்றமும் இருக்காது. 

நீங்கள் எதிர்ப்பது ஜாதி மற்றும் இட ஒதுக்கீடு என இரண்டையுமே என்றால், ஜாதியால் B.C-யான M.B.C-யான S.C-யான S.T-யான, அவர்களின் சமூக இழிவை போக்குவது எப்படி? ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்குவது எப்படி? ஜாதியின் பெயரால் அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் விடிவு பெறுவது எப்படி? ஜாதியின் பெயரால் படிக்காத பாமரராக, வேலை வாய்ப்பு பெறாமல் ஏழையாகவே தொடர்பவர்களின் கதி என்ன?

மாறாக, ஜாதியையும் எதிர்த்துக் கொண்டு இட ஒதுக்கீட்டையும் எதிர்த்துக் கொண்டு, தகுதி திறமை போய்விடும் என்றால்,
வாருங்கள்,

வாருங்கள்,ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சாக்கடை அள்ளும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்க்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப் பட்ட தெருக்கூட்டும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், சமுதாயத்தின் வீதியை இணைந்தே சுத்தம் செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், விவசாய வளம் பெருக்குவோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட பினத்தை எரிக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயத் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சலவை செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட ஆடு மாடு மேய்க்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட வீட்டு கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் காப்போம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் பாதுகாப்போம்.

இவ்வளவையும் கேட்பதற்கே உங்கள் எண்ணம் கூசினால், இவ்வளவையும் கேட்பதற்கு நாராசமாக இருந்தால், இவ்வளவையும் கேட்பது கூட அருவருப்பைத் தருமானால், தோழர்களே மன்னித்து கொள்ளுங்க்கள்; ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் - கேட்பதற்கே கூக்சமாக இருக்கும் இவ்வளவையும் செய்து கொண்டு இன்றும் தமிழக்த்தில் மக்கள் இருக்கிறார்கள் - மனிதர்கள் என்று பெயரளவில் மட்டும்.

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள், கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்வதற்கு அவர்களுக்கு இட ஓதுக்கீடு வேண்டுமா கூடாதா? அவர்கள் கேட்பது பிச்சை அல்ல - உரிமை. மறுக்கப்பட்ட உரிமை !

இதற்கும் மேலேயும் ஜாதி வாரி இட ஒதுக்கீட்டால் தகுதி திறமை போய் விடும் என்றால், இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர்களால்தான் தகுதி திறமை குறைந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? தேடித் தேடித் பார்த்தும் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற தோழர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும், தாங்கள் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றோம் என்று சொல்வதற்கும் கூச்சப்படுகிறவர்கள். இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள்(Scientists) இருக்கிறார்கள், மருத்துவர்கள்(Doctors) இருக்கிறார்கள், பொறியாளர்கள்(Engineers) இருக்கிறார்கள், ஆசிரியர்கள்(Teachers) இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெற்றவர்களிடம்தான் ஒழுக்கமும் நியாயமும் நேர்மையும் சமூக அக்கறையும் காண முடிகிறது.

தற்போது தமிழகத்தில் 69 % இட ஒதுக்கீடு இருக்கிறது. அப்படி என்றால் 31% இட ஒதுக்கீட்டில் வர வில்லை என்றுதானே பொருள். 31% இட ஒதுக்கீடு பெறாத மக்களே உங்கள் தகுதி திறமையை எங்கே ஒளித்து வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? என்று தயவு செய்து கூறுங்கள். இந்த 31% மக்கள் தகுதி திறமையை கண்டு பிடித்துத் தருகிறவர்களுக்கு நம் பாராட்டுக்கள். 





மிழகத்தில் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காதது உயர்ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்களின் மக்கள் தொகை விழுக்காடு 3%. அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் கல்வியில்லாமல் இருக்கிறார்கள். அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் ஏழை எளியோர் என்ற புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது?இவற்றை எல்லாம் கண்டு பிடித்து தருகிறவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

இந்தப் புள்ளி விவரங்களைத் தராமலும், இந்தப் புள்ளி விவரங்களை பெற்று விடக் கூடாது என்றும் முனைப்பாக இருப்பவர்களும்: "தகுதி திறமை போய்விடும்" என்று புலம்புவது பார்ப்பனீய செயலா இல்லையா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Tuesday, April 17, 2012

நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !


சி காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

சாப்ளின் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதாபாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதாபாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு!


தைக் கேட்டவுடன், இந்து மதத்தில் உயர் ஜாதி பார்ப்பனர்களால் ( பிராமணர்களால் ) ஏற்படுத்தப்பட்ட ஜாதி, சூத்திரன், பஞ்சமன் என்கிற இழிவில் இருந்து நம் திராவிட மக்கள் எப்போது விடுதலை அடைவோம்? எனும் கேள்வி தோன்றுகிறது. இழிவு நீங்க வேண்டும் என்றால், சும்மா இருந்தால் இழிவு நீங்காது. தந்தை பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவை, தந்தை பெரியார் ஊட்டிய மான உணர்வை பெற வேண்டும். நாமெல்லாம் அடிமை, தாசி புத்திரர்கள் என்று நம்மை எழுதி வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது ? யாருக்குத்தான் தன்மானம் உரைக்காது ? நம் சமூக விடுதலைக்காக பார்ப்பனீயத்திற்கு எதிரான போர் இன்றும் நடைபெறுகிறதா இல்லையா?

நி
ற்
க.

நாம் ஒரு கூட்டத்திற்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் போது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர், இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ, கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டிப் பாராட்டுவார்கள்;
சிலரோ, உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம் !

தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் ஜெயலலிதா கூறுகின்றார், "இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த ப்பட்டு, இரவு 12 மணி வரை திறந்திருக்கும்". உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.

உலகின் மிகச் சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெற்ற மாபெரும் நடிகர் சாப்ளின்.

முன்பு ஒரு முறை, ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்த் அவர்களை குறிப்பிட்டு "அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்" என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ, "இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?" என்கின்றார்அவ்ளோதான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல்வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களைப் பற்றியே கவலை படுகின்றனர்இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்கத் தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், "மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த Earth- பொறப்பாங்க" அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் "அப்டியா!" என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்த குழந்தைக்கு ஒரு சந்தேகம்

அப்பாவை கூப்பிட்டு "அப்பா 1930- இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சுஎப்டிப்பா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?"

இப்போது அப்பா ஆவென பார்த்து கொண்டு இருந்தார். குழந்தையின் பகுத்தறிவுக்கு முன்னால் 'நம்பிக்கை' கோஷ்டிகளால் தாக்குப் பிடிக்க முடியுமா? அப்பா கடிகாரத்தை பார்த்தார்சுற்றும் முற்றும் பார்த்தார், "தம்பி நேரம் ஆயிடிச்சு பாருஇன்னிக்கு படிச்சது போதும்வா போய் படுக்கலாம்."

இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான குழந்தையாகத்தான் இருந்தார் சாப்ளின் தன் சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்தபோது சில தடங்கல்களால் அவரால் பாட முடியவில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன் அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி மழலைக் குரலில் பாடினார். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது; கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளைத் தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் "பாடு பாடு" என்றனர். சாப்ளின் மழலையாய் "காச எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்" என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அனைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். ஆனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞனாக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியைத் தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக, தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்கள்
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக வேலையை விட்டு விட்டு VCD வாங்கிப் பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடிப் பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், "அபிஷ்டு.. அதுக்குள்ள நோக்கு என்ன அவசரம்.. இப்போதானே Copy போட ஆரம்பிச்சோம்.. சித்தெ பொறுத்து ஒரு வாரம் கழிச்சு வந்தேள்னா ரெடியா இருக்காதோன்னோ ? பரவால்ல வந்ததுதான் வந்தே 2000 ரூ அட்வான்ஸ் கொடுத்திட்டு போ. அடுத்த வாரம் மீதிய கொடுத்திட்டு CD-ய வாங்கின்டுப் போ. எல்லாம் ஏழுமலையான் கிருபடா அம்பி. ரெய்டு அது இதுன்னெல்லாம் நோக்கு ஒரு கவலையும் வரப்புடாது. கோட்டையே நம்ம கையில. புரிஞ்சுதோ ?!" என்கின்றார்.

திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்




Thursday, April 12, 2012

பேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி

தம் மனிதனை பண்படுத்தித் இருக்கிறதா அல்லது நாத்திகம் மனிதனை பண்படுத்தி இருக்கிறதா? மதம் காட்டுமிராண்டித்தனமா இல்லையா? நாத்திகம் மனிதநேயமா இல்லையா? இந்தக் கேள்விகளை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ந்தியாவில் இந்து இஸ்லாமிய மக்களின் தொகையயை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
விகிதாச்சாரப்படி இந்துக்கள் சிறும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:
  1. காஷ்மீர்
  2. பஞ்சாப்
  3. அருனாச்சல பிரதேசம்
  4. நாகாலாந்த்
  5. மெகாலயா 
  6. மிசோரம்
  7. லட்சத் தீவுகள்
ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் இந்துக்களே பெரும்பான்மையினர்.

விகிதாச்சாரப்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. காஷ்மீர்
  2. லட்சத் தீவுகள்
விகிதாச்சாரப்படி கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. நாகாலாந்த்
  2. மெகாலயா 

ந்தியாவில் மதக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை இங்கே படமாகக் காணலாம் : 

மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
இந்துக்கள் பெரும்பான்மையான அல்லது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் மதக் கலவரங்கள் நடந்துள்ளன, அமைதியின்மை, மனித உயிரிழப்பு.

ந்துத் தீவிரவாதிகள் முன்னிறுத்தும் பாரதமாதாவை இங்கே படமாகக் காணலாம் :
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், பாரதமாதாவின் திருப்பாதம் தமிழகத்தின் உள்ளே இல்லை. அந்த வகையில், ஒரு குறியீடு போலவே தமிழகம் அமைதி நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

ந்தியாவில் நக்சலைட்கள் பரவியுள்ள மாநிலங்களை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், இந்துக்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் நக்சல் போராளிகள் போராடுகின்றனர். இந்த விஷயத்திலும், தமிழகம் அமைதியான நிலையில் இருப்பதை காணமுடிகிறதா இல்லையா?

வை எல்லாவற்றிலிருந்தும் புரிவது என்ன?  
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நாத்திகர்கள் அதிகம்.  நாத்திகர்கள் எல்லா மதத்தையும் கருத்துக்களால் எதிர்ப்பவர்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்து என்று எந்த மதத்தையும் கருத்துக் கணைகளால் குடைந்து எடுப்பவர்கள் நாத்திகர்கள். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள்.

மண் பண்பட இயற்கை உரம் தேவை; அதுபோல, மனிதன் பண்பட பெரியார் கொள்கைகள் தேவை. பெரியார் கொள்கைகள் என்றவுடனே 'கடவுள் இல்லை' என்பதையோ, 'பிராமணர்களை எதிர்ப்பதையோ' என்பதாக எண்ணிக் கொண்டால், தந்தை பெரியாரை பற்றி முழுப் புரிதல் நம்மிடம் குறைவாக இருப்பதாகத்தான் பொருள்.  

ந்தை பெரியார் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார் சாஸ்திர இதிகாசம் புராணம் போன்றவற்றை எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார்  பார்ப்பனர்களை (பிராமணர்) எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ? 
தந்தை பெரியார் 'கடவுள் இல்லை' என்றார்களே, ஏன் 'கடவுள் இல்லை' என்றார்கள் ? 


திராவிடச் சமூகத்தில் உள்ள சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்ற இழிவுகளுக்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். இந்த அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டிருப்பது இந்து மதம் என்பதை புரிந்து கொண்டார்கள். 


ந்து மதத்துக்கு ஆதாரம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். 
இந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை, சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றா ஆதாரங்கள் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

ந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் எதற்காக? இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். 
இந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றவை பார்ப்பனர்களை (பிராமணர்) உயர்நிலையில் வைக்கவே இருப்பதை ஆராய்ந்தும், நடைமுறையிலும் அவை இருப்பதை கண்டுப்பிடிக்கிறார்கள்.


டுத்து, இந்த பார்ப்பனர்கள் (பிராமணர்) எப்படி உயர் நிலையில் இருந்துக்கொண்டு ஏணைய பெரும்பான்மையினரான திராவிட மக்களுக்கு சமுதாய இழிவை ஏற்படுத்துகிறார்கள்? என்று ஆராய்கிறார்கள். பார்ப்பனர்கள் (பிராமணர்), தாங்கள் கடவுளின் படைப்பு, கடவுளால் உயர் ஜாதியினராகப் பிறப்பிக்கப் பட்டவர்கள் என்று கூறுவதையும் அதனை திராவிடர்கள் ஏற்றுக்கொள்வதையும் நடைமுறையில் கண்டுப்பிடிக்கிறார்கள்.




ரி, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம். சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்றவற்றை களையவேண்டுமானால், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த இந்து மதத்திற்கு ஆதாரமான சாஸ்திர இதிகாச புராணங்களை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த சாஸ்திர இதிகாச புராணங்கள் தூக்கிப்பிடிக்கும்  பார்ப்பனர்களையும் (பிராமணர்) எதிர்த்தார். அதோடும் விடவில்லை அந்த பார்ப்பனர் (பிராமணர்) கூறிக்கொள்ளும் கடவுளின் படைப்பு என்பதை தகர்க்க கடவுளை நிராகரித்தார்கள்.


இவ்வளவு ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரங்களுக்கும் அனுபவங்களுக்குப் பிறகுதான் தந்தை பெரியார் கூறினார்கள் :
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி."


ஆனபோதிலும், 'கடவுள் இல்லை' என்ற தந்தை பெரியாரைத்தான் திராவிடத் தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்? தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்த பழம். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  ஆழமாக விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள். ஆகையால்தான், நாம் பேரிடர் தவிர்த்த திராவிடர்களாக உலா வருகிறோம்.

வாழ்க பெரியார் - வளர்க பகுத்தறிவு.

--
உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Tuesday, April 3, 2012

ராம் செத்தா'ராம்'



ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு. கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்; "தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்'" என்று. அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவிப் பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

இந்து மதத்தின் மனு சாஸ்திரத்தில் உள்ளபடி  வர்ணாஸ்ரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
1) முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் ஜாதியாம் :(
2) தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் ஜாதியாம் :(
3) தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் ஜாதியாம் :(
4) காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் ஜாதியாம் :(

இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(
இந்தப் படி நிலைக்கும்  கீழே பெண்கள் எனும் நிலையை கொண்டது இந்து மதம்.

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானாம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றான். எப்படி இருக்கிறது நியாயம்? ராமன் ஏன் கொன்றான் ? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் ஜாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் ஜாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்.

எப்போது சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான் !

திராவிட இயக்கத்தின் பயனால் கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்? என்பதுதான் நமது கேள்வி.

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள்? என்று குறிப்பிடுகிறோம் என்றால் :
- வர்ணாஸ்ரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- ஜாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது தந்தை பெரியார் காண விரும்பிய அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத்தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும். 

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விஹாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதாபாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?



[அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist-டிடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]


ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துதான், இன்றைய தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது.

தந்தை பெரியார், சமூகத்திற்கு தந்த  mutual exclusion semaphore : 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.



[ 'எப்போதுமே தலை விழுந்தால்? அந்த நாணயம், தல அஜித்தின் 'மங்காத்தா' நாணயம்' :) :) ]

புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக, புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது 'Accused ஆச்சாரியார்' சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :) பீராபிஷேகம் செய்யலாம். கல்லை இளநீரிலும் எலுமிச்ச தண்ணியிலும் குளிப்பாட்டலாம்.

வெளிநாட்டுகாரர்கள் கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு பாபர் மசூதியை இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடித்தது காவித் தீவிரவாதமா இல்லையா ?

குத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும்தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா? இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, ஜாதி, மூடப்பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக்கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், ஜாதி, மூடப்பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார்.

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா?!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்