Tuesday, March 12, 2013

தஞ்சைக்குள் நஞ்சா ?

ஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.

 

வானமோ பொய்த்தது; கர்நாடகமோ கடைக்கண் மூடியது; வந்ததோ வறட்சி. தொடர்வதோ தற்கொலைகள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் தற்கொலைகளின் ஆரம்பக்கட்ட அறிகுறி காவிரிப் படுகையில் தென்படுகிறது. இதில், பொன்னியின் செல்விக்கு (!) ( செல்வி.ஜெயலலிதா-வாம் ) மட்டும் குறைச்சல் இல்லை. ஏற்கனவே ஈழத்தை வீட்டு பீரோவில் வெச்சு இருக்காங்க. இன்னிக்கோ நாளைக்கோ பீரோவை திறந்து, எடுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.


இப்படி ஏற்கனவே தொல்லையில் துவளும் தஞ்சையில் மற்றொரு பாதகமாக பேரிடியொன்று வந்து இறங்குகிறது.

ஆம் ! அக்டோபஸ் வருகிறது ... ஜாதீ என்னும் ஆக்டோபஸ் வருகிறது.

தோ ஜாதீ புதிதாக தஞ்சைக்குள் நுழைய வரவில்லை. ஏற்கனவே இருக்கிற ஜாதீகளை ஒன்றிணைக்க வருகிறது. தஞ்சைக்குள் பெருவாரியாக இருக்கும் ஜாதீ கட்சிகள் முக்குலத்தோர் கட்சிகளே. அதாவது, கள்ளர், தேவர், மறவர் போன்றவை. இவர்கள் தஞ்சை கிராமங்களில் செய்த அட்டுழியங்கள் எண்ணிலடங்கா. 

தெருவுக்குள் ஆதி திராவிடர்கள் செருப்பு போடக் கூடாது என்றவர்கள். தோளில் துண்டுப் போடக் கூடாது என்றவர்கள். சைக்கிளை தெருவில் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியவர்கள்; ஆதி திராவிடர் தெரு வழியாக வரும் குழாயில், தண்ணீர் பிடிப்பது இழுக்கு என்று கருதுபவர்கள். ஆதி திராவிடர்களை கொச்சைப் படுத்திப் இழிவாய் பேசுவது; கட்டி வைத்து அடிப்பது போன்றவற்றை செய்த யோக்கியவான்கள் தான் இந்த முக்குலத்தோர். மறுக்க முடியுமா ?


இப்படி ஆதிக்கம் செய்தவர்கள் இன்றைய தேதியில், ராஜ ராஜ சோழனை தங்கள் முன்னோர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் 'மனு சாஸ்திர' அடிப்படையில் நீதி பரி பாலனம் செய்யப்பட்டது. அந்த மனு சாஸ்திர அடிப்படையில் ஆதி திராவிடர்கள் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரி என்று ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். இன்றைக்கும் இந்த பிரிவினையை அனைத்து கிராமங்களிலும் காணலாம்.

மிழ்நாட்டில் ஆதி திராவிடர் நிலை இவ்வாறாகத்தான் இருக்கிறது :

Percentage to Total Workers ( தமிழகம் முழுதும் )   
 i. Cultivators (  விவசாயிகள் ) - 10.2 %
 ii. Agricultural Labourers ( விவசாயத் தொழிலாளர்கள் ) - 58.5 %
 iii. Household Industry Workers ( வீட்டு வேலைத் தொழிலாளர்கள் ) 2.3 %
 iv. Other Workers ( இதர வேலையாட்கள் ) - 29.0%

தஞ்சை மாவட்டத்தில் புள்ளி விவரம் இவ்வாறாகக் கூறுகிறது.
தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஆதி திராவிடர் - 18%
தஞ்சையில் மொத்தமாக கல்வி பெற்றோர் - 75.5% 
கல்வி அறிவு பெற்ற  ஆதி திராவிடர்கள் - 64.1%

ஆதாரம் : http://www.tn.gov.in/deptst/ADIDRAVIDARANDTRIALWELFARE.pdf

இந்த புள்ளி விவரம் என்ன புரிய வைக்கிறது என்றால்; இன்னும் கல்விக் கண் தஞ்சையில் முழுமையாக இல்லை.

பாதிக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் விவசாயத் தொழிலாளர்கள். 29 விழுக்காட்டினர் இதர வேலையாட்களாக இருக்கிறார்கள். அது என்ன இதர  வேலையாட்கள்? தெருக் கூட்டுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், மலம் அள்ளுபவர்கள். அவர்கள் என்ன விரும்பியா செய்கிறார்கள்? இல்லை. இந்த பாழாய்ப்போன பார்ப்பனீய இந்து சமூகம் திணித்தது. ஏன் என்று கேட்டால்? 'முற்பிறவி வினை' என்று காதில் பூ சுத்துகிறார்கள் . 'தலை விதி' என்று வாய் கிழியப் பேசுகிறார்கள்.

நம் கேள்வி இதுதான்:
இந்த 'முற்பிறவி வினை', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விழ மாட்டேங்கிறது? இந்த 'தலை விதி', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விடிய மாட்டேன்கிறது ?


இன்றைக்கு இதே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த படித்த இளைஞர்கள் என்னதான் வெளி நாடுகளில் வசித்தாலும்,  தாங்கள் ஏதோ உயர்ந்த ஜாதி எனும் எண்ணம் கொண்டவராகவோ; தங்கள் ஜாதி, பெருமை வாய்ந்தது எனும் என்ணம் கொண்டவராகவோ; தங்கள் சுய ஜாதி அபிமானம் கொண்டவராகவோ எண்ணிக் கொண்டோ - தங்களின் பெயரின் பின்னால் 
சோழகர் என்றோ , மண்கொண்டார்  என்றோ, தஞ்ச்சிராயர் என்றோ, சேனை நாட்டார் என்றோ இன்னும் இத்யாதி இத்யாதி ஜாதி வாலைப் போட்டுக் கொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள். 

தெரியாமல் போடுகிறவர்கள் திருந்திக் கொள்வார்கள். தெரிந்தே போடுவோர், 'அடடா! மனித குல சமத்துவத்திற்கு எதிராக இப்படி தவறாக  நடந்து கொண்டோமே' என்று வருந்திக் கொள்வார்கள்.

படித்துப் பட்டம் பெற்று வேலையில் அமர்ந்து  சாதிப்பார்கள்  என்றுப் பார்த்தால், ஜாதீ அல்லவா பார்த்துக் கொண்டு  இருக்கிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த ஜாதீக்களை ஒருங்கிணைக்க தஞ்சைக்குள் ஓர் ஆக்டோபஸ் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆக்டோபசின் பெயர் "ராம தாஸ்". எப்படி, கதைப்படி ராமன் நம்மை எல்லாம் "சூத்திரன்" என்றும் "பஞ்சமன்" என்றும் நிலை நிறுத்த எண்ணினானோ அதே போல இந்த ராம தாஸ் செய்ய முனைகிறார்.ராமனின் தாசன் அல்லவா ?

முக்குலத்தோர்(கள்ளர் , தேவர், மறவர் ) யோக்கியமானவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருப்பதாகத் தாங்களே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இவர்கள் வாங்கும் நிலத்துக்கு பூமி பூஜை செய்ய பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்; இவர்கள் கிரஹப் பிரவேசம் எனும் பெயரில் பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்;இவர்கள் வீட்டுத் திருமணத்தை பார்ப்பன புரோகிதர் நடத்தி வைப்பதும்; பெற்றோருக்கு திதி   கொடுக்கும் போது பார்ப்பன புரோகிதனை அழைத்து தங்கள் சுயமரியாதையை இழப்பதும் இதே முக்குலத்தோர்தான்.இந்தச் சுயமரியாதை சிங்கங்கள் கோவிலில் இன்றளவும் கருவறைக்குள் நுழைய முடியாது. அவர்களின் பிரத்யேக  ஜாதீ கோவிலில் வேண்டுமானால் போகலாம். மறுக்க முடியுமா?

 
"னைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆக முடியாதுடா அம்பி. அது பிரம்மாவின் முகத்தில் பிறந்தவாள் மட்டும்தான் செய்யணும். புரியுதோ இல்லியோ நோக்கு. அபிஷ்டு அபிஷ்டு !! பிராமனாள் எல்லாம் கடவுளுக்கும் மேலானவாடா. வேதத்தை படிக்கலியோ என்னோ ?! ஓ ! வேதத்தை நீர் படித்தா காதில ஈயத்த ஊத்த சொல்லின்னா எழுதி வெச்சிருக்கோம். சித்தே மறந்துட்டேண்டா அம்பி !! 

நன்னா ஞாபகம் வெச்சுக்கோ - எங்க்களவாவ வெச்சுதான் நீங்கோ பூமி பூஜை பண்ணனும், வீடு குடி போகனும், திருமணம் செய்யணும், சாந்தி முஹுர்த்தம் செய்யணும், திதி செய்யணும்; ஆனா, நன்னா ஞாபகம் வெச்சுக்கோ இந்த கருவறைகுள்ள மட்டும் வரப்டாது. ஏன்  ப்டாது எதுக்கு ப்டாதுன்னு கேக்கப் புடாது!

கலைஞர், உங்களவா சுயமரியாதை அடையனும்ன்னு,  'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்' ரெண்டு தடவ சட்டமா கொண்டு வந்தார். விட்டுவோமா ? இல்ல அவ்வளவு சீக்கிரத்தில் அத விட்டுடுவோமான்னுதான் கேட்கிறேன். 

உங்களவா முதுகில பாரு. எங்களவா முதுகில பாரு. வித்தியாசம் தெரியுதா ? ம்ம்ம்.. ஆமாம்! நாங்கள் பூனூல் போட்டிண்டு இருக்கோம். ஏன் தெரியுமா? நாங்கள் துவிஜாதிகள் ( இரு பிறப்பாளர்கள்  ). சுத்திராளுக்கு  பூணூல் போட உரிமை இல்லைடா அம்பி! மனு சாஸ்திரம் சொல்லுது.

ஆனாலும் நீங்களும் நாங்களும் இந்து. மறந்து விடாதீர்கள்; மறந்தும் இருந்து விடாதீர்கள்; நாமெல்லாம் இந்து; எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

லோகத்தில் பொறாமை அதிகரிச்சுட்டே இருக்கு. வேனும்னா பாரு, இப்படி சுயமரியாதை-கியமரியாதை உரிமை-கிரிமை ஏதானும் கேட்டா,  எங்கள் காலில் விழுகிற உங்களவாவே உங்கள எதிர்க்கிறாளா இல்லையா பாரு. பத்திரிகை ( தினமலர், தினமணி, துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி ) எல்லாம் எங்களவா கைய்லன்னா இருக்கு.

இவாளுக்கு வியாக்யானம் சொல்லியே பிராணனை போகுதே !!"

நி
ற்
ப்படி இந்த முக்குலத்தோர் தங்கள் சுயமரியாதையை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அவர்களும் ஆதி திராவிடர்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைக்கக் கூடாது.

தந்தை பெரியார் ஒழுக்கம் என்பதாகக் கூறியது எவ்வளவு ஆழமானது:

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

இந்து மதத்தின் படியே இந்த முக்குலத்தோர் என்போர் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? சூத்திரன் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இந்து மதத்தின் படியே ஆதி திராவிடர்கள் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? பஞ்சமர் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இருவர் மேலும் இந்து மதத்தின் வர்னாஸ்ரம இழிவுதானே தொக்கி நிற்கிறது ?

சூத்திரன், பஞ்சமர் என்ற சொல் வெருக்கத்தக்கதாக இருந்தாலும், 
பஞ்சமர் என்ற சொல்லைக் காட்டிலும் சூத்திரன் என்ற சொல் அல்லவா மகா மட்டமான கேவலமான இழிவான சொல். மறுக்க முடியுமா?

பார்ப்பனர் அல்லாத அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறது. திராவிடர், ஆதி திராவிடர் இருவருக்குமே இட ஒதுக்கீடு இருக்கிறது. இருவருமே பார்பனீயத்தால் பாதிக்கப்பட்ட சமுகம். இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி திராவிடருக்கும் இருக்கிறது, ஆதி திராவிடருக்கும் இருக்கிறது. 

ஆனாலும் , வழக்கம் போலவே ஆதி திராவிடர் கல்விப் பெற்றாலும், பொருளாதார மேம்பாடு அடைந்தாலும் பிற்படுத்தப் பட்டோர்க்கு பொறாமைத் தீ பொங்கி வழிகிறது. எப்படி என்றால்? பார்ப்பனர்களுக்குப் பொத்துக் கொண்டு வருமே அதைவிட கொஞ்சம் குறைவாக பொத்துக் கொண்டு வருகிறது.

ஏற்கனவே இருக்கிற இழிவு பத்தாது என்று, இழிவு++ ஆக  ராமதாஸ் அக்டோபசை விட்டால் என்ன ஆகும்?

வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்பானேன்?


முறையாக காவிரியில் தண்ணீர் கிடைத்து நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய தஞ்சையில் ஜாதீ எனும் நஞ்சையா விதைப்பது?

உண்மையுடன் 
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



No comments:

Post a Comment