Tuesday, April 17, 2012

நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !


சி காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

சாப்ளின் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதாபாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதாபாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு!


தைக் கேட்டவுடன், இந்து மதத்தில் உயர் ஜாதி பார்ப்பனர்களால் ( பிராமணர்களால் ) ஏற்படுத்தப்பட்ட ஜாதி, சூத்திரன், பஞ்சமன் என்கிற இழிவில் இருந்து நம் திராவிட மக்கள் எப்போது விடுதலை அடைவோம்? எனும் கேள்வி தோன்றுகிறது. இழிவு நீங்க வேண்டும் என்றால், சும்மா இருந்தால் இழிவு நீங்காது. தந்தை பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவை, தந்தை பெரியார் ஊட்டிய மான உணர்வை பெற வேண்டும். நாமெல்லாம் அடிமை, தாசி புத்திரர்கள் என்று நம்மை எழுதி வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது ? யாருக்குத்தான் தன்மானம் உரைக்காது ? நம் சமூக விடுதலைக்காக பார்ப்பனீயத்திற்கு எதிரான போர் இன்றும் நடைபெறுகிறதா இல்லையா?

நி
ற்
க.

நாம் ஒரு கூட்டத்திற்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் போது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர், இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ, கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டிப் பாராட்டுவார்கள்;
சிலரோ, உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம் !

தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் ஜெயலலிதா கூறுகின்றார், "இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த ப்பட்டு, இரவு 12 மணி வரை திறந்திருக்கும்". உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.

உலகின் மிகச் சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெற்ற மாபெரும் நடிகர் சாப்ளின்.

முன்பு ஒரு முறை, ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்த் அவர்களை குறிப்பிட்டு "அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்" என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ, "இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?" என்கின்றார்அவ்ளோதான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல்வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களைப் பற்றியே கவலை படுகின்றனர்இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்கத் தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், "மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த Earth- பொறப்பாங்க" அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் "அப்டியா!" என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்த குழந்தைக்கு ஒரு சந்தேகம்

அப்பாவை கூப்பிட்டு "அப்பா 1930- இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சுஎப்டிப்பா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?"

இப்போது அப்பா ஆவென பார்த்து கொண்டு இருந்தார். குழந்தையின் பகுத்தறிவுக்கு முன்னால் 'நம்பிக்கை' கோஷ்டிகளால் தாக்குப் பிடிக்க முடியுமா? அப்பா கடிகாரத்தை பார்த்தார்சுற்றும் முற்றும் பார்த்தார், "தம்பி நேரம் ஆயிடிச்சு பாருஇன்னிக்கு படிச்சது போதும்வா போய் படுக்கலாம்."

இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான குழந்தையாகத்தான் இருந்தார் சாப்ளின் தன் சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்தபோது சில தடங்கல்களால் அவரால் பாட முடியவில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன் அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி மழலைக் குரலில் பாடினார். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது; கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளைத் தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் "பாடு பாடு" என்றனர். சாப்ளின் மழலையாய் "காச எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்" என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அனைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். ஆனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞனாக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியைத் தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக, தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்கள்
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக வேலையை விட்டு விட்டு VCD வாங்கிப் பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடிப் பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், "அபிஷ்டு.. அதுக்குள்ள நோக்கு என்ன அவசரம்.. இப்போதானே Copy போட ஆரம்பிச்சோம்.. சித்தெ பொறுத்து ஒரு வாரம் கழிச்சு வந்தேள்னா ரெடியா இருக்காதோன்னோ ? பரவால்ல வந்ததுதான் வந்தே 2000 ரூ அட்வான்ஸ் கொடுத்திட்டு போ. அடுத்த வாரம் மீதிய கொடுத்திட்டு CD-ய வாங்கின்டுப் போ. எல்லாம் ஏழுமலையான் கிருபடா அம்பி. ரெய்டு அது இதுன்னெல்லாம் நோக்கு ஒரு கவலையும் வரப்புடாது. கோட்டையே நம்ம கையில. புரிஞ்சுதோ ?!" என்கின்றார்.

திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்




1 comment:

  1. சிறந்த பதிவு..சாப்ளின் பற்றிய அரிய தகவல்..

    ReplyDelete